Connect with us

இலங்கை

வடமாரட்சி கிழக்கு கேவில் முதல் யாழ்ப்பாணம் வரை பேருந்து சேவை ஆரம்பம்!

Published

on

Loading

வடமாரட்சி கிழக்கு கேவில் முதல் யாழ்ப்பாணம் வரை பேருந்து சேவை ஆரம்பம்!

வடமராட்சி – கிழக்கு கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையில் மேலுமொரு பேருந்து சேவை இன்றையதினம் (10-01-2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சங்கத்தினரால் இந்த பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த பேருந்து சேவை, கேவிலில் இருந்து காலை 09.45 மணிக்கு புறப்பட்டு மருதங்கேணி, புதுக்காடு வழியாக யாழ்ப்பாணம் சென்றடையும்.

பின்னர் மாலை 03.35 மணிக்கு யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கேவிலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், வடமராட்சிக் கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர், கிராம சேவையாளர், இளைஞர்கள் என பலரும் கலந்து கலந்து கொண்டுள்ளனர்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன