Connect with us

இலங்கை

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பண மோசடி… குடும்பத்துடன் தலைமறைவான சந்தேக நபர்!

Published

on

Loading

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பண மோசடி… குடும்பத்துடன் தலைமறைவான சந்தேக நபர்!

ஐரோப்பாவிற்கு அனுப்புவதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் வழங்கியுள்ளனர்.

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, ஹுங்கம, அம்பலாந்தோட்டை, சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராமை ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் நடாத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    

Advertisement

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தலைமறைவாகி இருந்த நிலையில் அம்பாந்தோட்டை, சமரகோன்வெவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன