Connect with us

இந்தியா

சர்ச்சைப் பேச்சு… சீமான் குறித்து ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!

Published

on

Loading

சர்ச்சைப் பேச்சு… சீமான் குறித்து ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!

பெரியாரை விமர்சனம் செய்பவர்களைப் பற்றி பேசி நான் அவர்களுக்கு அடையாளம் காட்ட விரும்பவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

Advertisement

சீமானின் இந்த பேச்சுக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சீமான் மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை கொளத்தூரில் இன்று பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பெரியார் குறித்து விமர்சனம் செய்த சீமான் பெயரை குறிப்பிடாமல் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “இன்றைக்கு யார் யாரோ பெரியாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரை விமர்சனம் செய்பவர்களைப் பற்றி பேசி நான் அவர்களுக்கு அடையாளம் காட்ட விரும்பவில்லை.

Advertisement

ஆனால், பெரியார் தன்னுடைய உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரையில், தமிழ் சமூகத்திற்காக, மனித உரிமைக்காக, குறிப்பாக பெண் உரிமைக்காக போராடியவர்” என்று தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன