Connect with us

இலங்கை

முகநூல் ஊடாக தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற விருந்து… சிக்கிய 10 பேர்

Published

on

Loading

முகநூல் ஊடாக தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற விருந்து… சிக்கிய 10 பேர்

தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்து ஒன்றின் போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கை பொலன்னறுவை – பெதிவௌ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

கைது செய்யப்பட்டவர்கள் முகநூல் ஊடாக இந்த விருந்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிகையின் போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 45 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபான போத்தல்களும், 550 மில்லிகிராம் கொக்கைன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் 18 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றையதினம் (12-01-2024) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன