Connect with us

இந்தியா

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அரிவாளை கையில் தூக்கிய நடிகர் வேலராமமூர்த்தி மனைவி!

Published

on

Loading

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அரிவாளை கையில் தூக்கிய நடிகர் வேலராமமூர்த்தி மனைவி!

புகழ்பெற்ற எழுத்தாளரான வேல ராமமூர்த்தி, குற்றப் பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.

இவர் எழுதிய குற்றப்பரம்பரை என்கிற நாவலை சினிமாவாக எடுக்க முயற்சியும் நடைபெற்று வருகிறது. எழுத்தாளராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் நடிகராகவும் கலக்கி வருகிறார் வேல ராமமூர்த்தி.

Advertisement

கிராமத்து வில்லன் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் இவர், மதயானை கூட்டம் படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். பின்னர், பல படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார்.

மதுரை அவனியாபுரத்தில் இவரது வீடு உள்ளது. இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அதனால், வேல ராமமூர்த்தி வீட்டில் இருந்து வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமடைந்த வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார்.

Advertisement

இதையடுத்து, போலீசார் அவரை தடுத்தனர். பின்னர், இன்று ஒரு நாள் பொறுத்துக்கங்க என்று அவருக்கு நிலைமையை எடுத்து கூறினார்.

ஆனால், அவரோ “நாங்க வயசானவங்க. இங்க இருக்கிறோம். வெளியே போகனும்னா எப்படி போக முடியும்? கடைக்கு போகனும்னா எப்படி போக முடியும்?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், “பேரன், பேத்திகள் எப்படி வருவாங்க? ஒவ்வொரு வருஷமும் இன்றைக்கு இரவுதான் கட்டுவாங்க. இந்த முறை இன்றைக்கு காலையிலேயே கம்பை கட்டிட்டிருக்காங்க” என்று தனது பிரச்னையை சொன்னார். பின்னர், போலீசார் அவரை எப்படியோ சமாளித்து வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன