Connect with us

இலங்கை

தமிழக முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த சாணக்கியன் எம்.பி

Published

on

Loading

தமிழக முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த சாணக்கியன் எம்.பி

தமிழக முதலமைச்சருடன்  மு. க  ஸ்டாலினுடன் , இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாண்க்கியன் உள்ளிட்டவர்கள் எடுத்த   செல்ஃபி புகைப்படம் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான நேற்று (12) தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகள் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Advertisement

தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் இந்தக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் இலங்கை அகதிகள் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பல காலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் தாம் இந்த விழாவின் போது சந்தித்ததாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன