Connect with us

இலங்கை

தைத்திருநாளை முன்னிட்டு முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு

Published

on

Loading

தைத்திருநாளை முன்னிட்டு முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு

  முல்லைத்தீவு – பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு இடம்பெறும் விசேட பூசை வழிபாடுகள்( 13 )இன்றும் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, பல்வேறு சர்ச்சைகளை தென்னிலங்கை பௌத்த பிக்குகள் ஏற்படுத்தி இருந்த்தனர்.

Advertisement

இந்நிலையில் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட பூசை வழிபாடுகள் மக்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

இந்த விசேட பூசை வழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.

இந் நிலையில் நீராவியடிப் பிள்ளையாருக்கு விசேட அபிஷேக பூசைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பிள்ளையாருக்கு குழை சோறு படையலிட்டு மிகச் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றன.

Advertisement

மேலும் இந்த வழிபாடுகளில் செம்மலை மற்றும், செம்மலை கிழக்கு கிராம மக்கள், அடியவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன