இலங்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு நிலச்சரிவு முன்கூட்டியே எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு நிலச்சரிவு முன்கூட்டியே எச்சரிக்கை!
பல பகுதிகளுக்கு நிலச்சரிவு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (13) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி பதுளை மாவட்டத்தில் வெலிமட, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பததும்பர, உடுதும்பர, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.