Connect with us

இலங்கை

பாடசாலை மாணவியை கடத்தல் சம்பவம்… சந்தேக நபர் வெளியிட்ட பரபரப்பு காரணம்!

Published

on

Loading

பாடசாலை மாணவியை கடத்தல் சம்பவம்… சந்தேக நபர் வெளியிட்ட பரபரப்பு காரணம்!

கண்டி – அம்பரப்பொல பகுதியில் நேற்று முன்தினம் (11-01-2025) பாடசாலை மாணவியை கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் மாணவியை கடத்தியமைக்கான காரணத்தை வெளிபடுத்தியுள்ளார்.

பொலிஸ் தடுப்பு காவலில் உள்ள சந்தேக நபர், ஜப்பானில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்ததாகவும், அங்கு சம்பாதித்த பணத்தை தனது கடத்தப்பட்ட மாணவியின் தந்தையிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Advertisement

பணம் தனக்குத் திருப்பித் தரப்படாததால், இதுபோன்ற செயலைச் செய்யத் தூண்டப்பட்டதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

தவுலகல பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் 18 வயது மகள் கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட மாணவி மற்றும் சந்தேக நபரை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, கடத்தலை மேற்கொண்ட சந்தேக நபரின் கைப்பேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், சந்தேக நபர் அம்பாறை பொலிஸ் பிரிவில் இருப்பது தெரியவந்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபரும் சிறுமியும் இன்று (13) காலை அம்பாறை பேருந்து நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்படும் சொகுசு பேருந்தில் இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருப்பதாகவும், சிறுமியை வைத்தியவரிடம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன