உலகம்
இறுதி உரைக்கு தயாராகும் ஜோ பைடன்!

இறுதி உரைக்கு தயாராகும் ஜோ பைடன்!
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஜோ பைடன் நாளை 15ஆம் திகதி நாட்டு மக்களுக்கு பிரிவுபசார உரையாற்றவுள்ளார்.
அப்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ பைடன் தான் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு தனது மகன் உள்ளிட்ட பலருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார்.
இதற்கிடையே மேலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.