Connect with us

இலங்கை

இலங்கையில் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

Published

on

Loading

இலங்கையில் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

கொழும்பு – வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் மாத்தறையில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பதுளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

குறித்த வவிபத்தில் தெயியன்வல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன