Connect with us

இலங்கை

கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

Published

on

Loading

கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

கண்டி – அம்பரப்பொல பகுதியில் கடந்த 11-01-2025 ஆம் திகதி கடத்தப்பட்ட பாடசாலை மாணவியையும், அவரை கடத்திய சந்தேக நபரையும் அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், மீட்கப்பட்ட மாணவியும் இன்றையதினம் (14-01-2025) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேவேளை, சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்ததோடு, ஊடகங்களிடம் பேசுகையில், தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் ஏனைய இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்று இது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாகக் அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன