Connect with us

இலங்கை

சுற்றுலாத்துறை அமைச்சரின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி!

Published

on

Loading

சுற்றுலாத்துறை அமைச்சரின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி!

இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்திருநாளன்று, எனது மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தைப்பொங்கல் என்பது ஆழ்ந்த சிந்தனை, நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கான நாளொன்றாகும். அறுவடைக்குப் பங்களிப்பவர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பை மரியாதை செய்யும் இத்தருணத்தில், இயற்கை, விவசாயம் மற்றும் நமது சமூகங்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையிலான ஆழமான தொடர்பை நாம் நினைவு கூர்கிறோம்.

Advertisement

பயபக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் புத்துணர்ச்சி நிறைந்த இக்கொண்டாட்டமானது, அறுவடை காலத்தின் தொடக்கத்தை மட்டுமல்ல, சூரியனின் வடக்கு நோக்கிய சஞ்சாரத்தையும் குறித்து நிற்கிறது. இது பிறக்கின்ற தமிழ்ப்புத்தாண்டிற்கான புதிய தொடக்கங்களையும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் அறிவிக்கிறது.

ஆயிரமாண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டுவரும், தைப்பொங்கல் திருநாளானது, பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் நீடித்த வலிமைக்கு சான்றாக நிற்கிறது.

இலங்கைக்கும் உலகிற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கூட்டு உறுதிப்பாட்டுடன் அனைவரும் ஒன்றிணைந்து, அன்பைத் தழுவி, மனித நேயத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும்.

Advertisement

தைப்பொங்கலின் உணர்வு, நமது தேசத்தின் செழிப்புக்கும், மக்களின் நலனுக்கும் பகிரப்பட்ட பொறுப்புணர்வை வளர்ப்பதற்காக, அனைத்துப் பிரிவினைகளையும் கடந்து, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்க நம்மை வரவேற்கிறது.

இத்தைப்பொங்கல் திருநாளானது, ஒவ்வொரு வீட்டிற்கும் அமைதி, செழிப்பு மற்றும் அபரிமிதமான மகிழ்ச்சியைக் கொண்டுவருவதுடன், நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் நிறைந்த எதிர்காலத்தை நோக்கித் தொடர்ந்தும் நம்மை ஒன்றிணைந்து பணியாற்ற ஊக்குவிக்கட்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன