இலங்கை
தமிழர் பகுதியில் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிய இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள்!

தமிழர் பகுதியில் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிய இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள்!
மன்னாரில் இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
குறிப்பாக மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றுள்ளது.
இதேவேளை, வர்த்தக நிலையங்கள் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மன்னாரில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.