உலகம்
பெண்களை மனிதர்களாக மதிக்காத தலிபான்!

பெண்களை மனிதர்களாக மதிக்காத தலிபான்!
பெண்களுக்கு எதிரான தலிபானியர்களின் அடக்குமுறை கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்துமாறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களிடம் சமூக ஆர்வலரான மலாலா யுசுப் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அமைப்பு அங்குள்ள பெண்களை மனிதர்களாக பார்ப்பதில்லை. இஸ்லாமிய நாடுகளின் பெண் கல்விக்கென குரல் கொடுக்கும் மலாலா யுசுப்ஷாய், சர்வதேச மாநாடொன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரில் இந்த மாநாடு இடம்பெற்றது. பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் கல்வி உட்பட தொழில் அணுகுமுறைகளுக்கு தடைவிதிக்கும் வகையில் தலிபானின் கொள்கைகள் அமையப்பெற்றுள்ளன.
இவை இஸ்லாமிய கொள்கைகள் அல்ல என அவர் முஸ்லிம் தலைவர்களை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். மீண்டுமொரு முறை பாலின இனவெறி முறையை தலிபான் அரசாங்கம் உருவாக்குவதாக மலாலா யுசுப்ஷாய் குற்றம் சுமத்தியுள்ளார்.