Connect with us

இலங்கை

வெளிநாட்டில் தாய்… பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்துவந்த சிறுமி எடுத்த வீபரித முடிவு!

Published

on

Loading

வெளிநாட்டில் தாய்… பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்துவந்த சிறுமி எடுத்த வீபரித முடிவு!

புத்தளம் – முந்தலில் உள்ள மங்கள எளிய, வீஹேன்கட்டுவ பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (12-01-2025) இடம்பெற்றுள்ளது.

Advertisement

குறித்த சம்பவத்தில் 15 வயதான சிங்கபுலி ஹேனயலாகே ரஸ்மி லக்‌ஷிகா ரணவீர என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது தந்தை குருநாகலில் வசித்து வருகின்றார்.

Advertisement

இதனையடுத்து சிறுமி தனது அம்மம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற போது, சிறுமியின் அம்மம்மாவும், அவரது கணவரும் தேவாலயத்திற்கு செல்வதற்காக தயாராகி குறித்த சிறுமியையும் அழைத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும், தனக்கு உடல் நிலை சரியில்லை எனத் தெரிவித்த  சிறுமி, தான் ஓய்வெடுக்க வேண்டும் எனவும், இருவரையும் ஆலயத்திற்கு செல்லுமாறும் கூறியுள்ளார்.

Advertisement

இதனையடுத்து, சிறுமியின் அம்மம்மாவும், அவரது கணவரும் தேவாலயத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வருகை தந்த போது சிறுமி உறங்கும் அறை பூட்டப்பட்டிருப்பதை அவதானித்து அந்த அறையின் கதவை தட்டியுள்ளனர்.

இதேவேளை, குறித்த சிறுமியின் சத்தம் எதுவும் இல்லாததால் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, அந்த சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முந்தல் பொலிஸார் அங்கு விசாரணைகளை முன்னெடுத்ததுடன், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திற்கு சென்று அங்கு மரண விசாரணையை முன்னெடுத்தார்.

இதனையடுத்து சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், காதல் தொடர்பு காரணமாக அல்லது வேறு ஏதும் காரணங்களால் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன