Connect with us

இலங்கை

உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு!

Published

on

Loading

உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு!

உர மானியத்திற்கான நிதி வழங்கல் தற்போது 95% நிறைவடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை ரூ.16,369 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் ஜெனரல் யு. பி.  ரோஹண ராஜக்ஷ தெரிவித்தார்.

Advertisement

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிலவரப்படி, உர மானியங்களுக்காக விவசாயிகளுக்கு 9,889 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்தது.

இன்றைய (15) தினத்திற்குள் 1,666 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அனுராதபுரம், அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்கள் அதிக மானியப் பணத்தைப் பெற்றுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ. பி. ரோஹண ராஜக்ஷ மேலும் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன