Connect with us

இந்தியா

மகாராஷ்டிராவில் காத்தாடி நூல் அறுத்து உயிரிழந்த நபர்

Published

on

Loading

மகாராஷ்டிராவில் காத்தாடி நூல் அறுத்து உயிரிழந்த நபர்

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நைலான் மாஞ்சா நூல் தொண்டையை அறுத்துக் கொண்டதில் 23 வயது இளைஞர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பதார்டி கிராம வட்டப் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

பாதிக்கப்பட்ட சோனு கிசான் தோத்ரே, தியோலாலி முகாமில் இருந்து பதார்டி பாட்டா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​மாஞ்சா நூல் அவரது தொண்டையை அறுத்துக் காயப்படுத்தியது.

இந்திராநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அந்த நபரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு அதிக இரத்தப்போக்கு காரணமாக அவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக சோனு பணியாற்றி வந்தார் என்றும், விபத்து மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன