Connect with us

இலங்கை

மான், மறை கொம்புகளுடன் சிக்கிய பாடசாலை உயர்தர மாணவன் உட்பட நால்வர்!

Published

on

Loading

மான், மறை கொம்புகளுடன் சிக்கிய பாடசாலை உயர்தர மாணவன் உட்பட நால்வர்!

புத்தளத்தில் மான், மறை கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகளை விற்பனை செய்ய முயற்சித்த உயர்தர பாடசாலை மாணவன் உட்பட  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை அலவ்வ பகுதியில் வைத்து நேற்றையதினம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Advertisement

விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புத்தளம் – கருவலகஸ்வெவ மற்றும் குருநாகல் வனவிலங்கு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் உடவலவ, கேகாலை, தெனாலேகம மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

கைது நடவடிக்கையின் போது, 9 அடுக்கு மான் கொம்பு, ஒரு அடுக்கு ஒற்றை மான் கொம்பு, மறை கொம்பு, எருமை கொம்பு மற்றும் விற்பனை செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ம king conch seashell சங்குகள், சந்தேக நபர்கள் பாவித்த கைத்தொலைபேசிகள், சந்தேக நபர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய சொகுசு கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன