Connect with us

இந்தியா

பொங்கல் பரிசு இன்னும் வாங்கலையா? – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Published

on

Loading

பொங்கல் பரிசு இன்னும் வாங்கலையா? – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.  மேலும், இலவச வேட்டி- சேலைகளும் ரேஷனில் வழங்கப்படுகிறது.

Advertisement

கடந்த 9-ம் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 70 சதவிகித மக்கள் ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர். சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் வாங்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் கூட்டுறவுத்துறை உயரதிகாரி ஒருவர், “விடுமுறை முடிந்து வந்தாலும் ரேஷனில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளோம். எனவே, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காத பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன