Connect with us

உலகம்

டிரம்ப் நீட்டிய உதவிக்கரம்; மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ‘டிக்டாக்’

Published

on

Loading

டிரம்ப் நீட்டிய உதவிக்கரம்; மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ‘டிக்டாக்’


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 20/01/2025 | Edited on 20/01/2025

சீன செயலியான டிக்டாக் பயனர்களின் தகவல்களைச் சீனாவிற்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில் இந்த செயலி கடந்த 2020ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து, அமெரிக்க மக்களின் தனிநபர் விபரங்களை டிக்டாக் செயலி மூலம் சீனா அரசு உளவு பார்க்கின்றன என்று தொடர் புகார்கள் எழுந்தன. இந்த புகாரை தொடர்ந்து, அமெரிக்க சட்டவிதிகளின்படி டிக்டாக் செயலிக்கு ஜோ பைடனின் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடை நேற்று (19-01-25) அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தது. 

Advertisement

இதற்கிடையில், இந்த தடையை எதிர்த்து அமெரிக்கா உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த சூழலில், நேற்று டிக்டாக் செயலி தடை அமெரிக்காவில் அமலுக்கு வந்தது. அதன்படி, அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்தப்பட்டு, ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக்டாக் செயலி இன்று (20-01-25) மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், இன்று காலை அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்த சூழ்நிலையில், டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் சேவையை மீண்டும் தொடங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • டிரம்ப் நீட்டிய உதவிக்கரம்; மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ‘டிக்டாக்’

  • பரந்தூர் மக்களைச் சந்திக்கும் விஜய்; காவல்துறை விதித்த 4 நிபந்தனைகள்!

  • பேரூராட்சி இணைப்பு விவகாரம்; கொதிநிலையில் குற்றாலம்!

  • “பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பதற்கான இடம் தேர்வு” – ஆனந்த் தகவல்!

  • “பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை” – இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பரபரப்பு கருத்து!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன