Connect with us

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Published

on

Loading

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக ஒருவார காலப்பகுதிக்குள் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவை முழு வீச்சில் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது கடினமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

எனினும் இந்த விவகாரத்தின் பாரதூர தன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி, அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன