உலகம்
கனடாவில் கோர விபத்து!

கனடாவில் கோர விபத்து!
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
புஸ்பராசா பகீரதன் மற்றும் அவருடைய மகள் றியானா ஆகியோரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வாகனமொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில், குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, மகளை தூக்கிக் கொண்டு வீதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்தபோது,
மற்றுமொரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,
பின்னர் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதாகவும்
இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்புபட்டிருந்ததாகவும், ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும், மத்திய காலத்தில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.[ஒ]