இலங்கை
பாராளுமன்றத்தில் உணவுகளுக்கான கட்டணம் 2000 ரூபாயாக உயர்வு!

பாராளுமன்றத்தில் உணவுகளுக்கான கட்டணம் 2000 ரூபாயாக உயர்வு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவுக் கட்டணம் 2000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அவைக் குழுவின் இன்றைய முடிவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற உணவு மண்டபத்தில் காலை உணவின் விலை ரூ.600 ஆகவும், மதிய உணவு ரூ.1,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கோப்பை தேநீரின் விலை 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என குழு உறுப்பினர் கமகேதர திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த புதிய விலைகள் பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்