Connect with us

உலகம்

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பினால் 3 ஆண்டு சிறை; பாகிஸ்தான் விதித்த புதிய கட்டுப்பாடு!

Published

on

Loading

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பினால் 3 ஆண்டு சிறை; பாகிஸ்தான் விதித்த புதிய கட்டுப்பாடு!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 24/01/2025 | Edited on 24/01/2025

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை பாகிஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் அசாம் நசீர் தரோர் நேற்று முன் தினம் மின்னணு குற்றத் தடுப்பு சட்டத்தை அறிமுகம் செய்து தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின் மூலம், சமூக ஊடகங்களில் சட்ட விரோத மற்றும் புண்படுத்தும் உள்ளடகத்தை தடுப்பதற்கு உத்தரவிடவும், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்யவும் அதிகாரம் கொண்ட நிறுவனத்தை உருவாக்கப்படும்

Advertisement

இந்த புதிய சட்டத்தின் கீழ் சமூக ஊடக தளங்கள், புதிய சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டத்தை பின்பற்ற தவறினால், தற்காலிக அல்லது நிரந்தர தடைகளை எதிர்கொள்ள நேரிடும். சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பினால் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். 

பாகிஸ்தான் அரசின் இந்த புதிய சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் கூறுகையில், ‘முன்மொழியப்பட்ட சட்டம் பேச்சு சுதந்திரத்தை மேலும் நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசியலமைப்பு உரிமைகளுக்காக வாதிடும் குரல்களை நசுக்குவதற்கு இந்த மசோதா ஒரு அடித்தளத்தை அமைக்கும்’ என்று கூறினார். 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பினால் 3 ஆண்டு சிறை; பாகிஸ்தான் விதித்த புதிய கட்டுப்பாடு!

  • ”அந்த கட்சியினுடைய பெயரைக் கூட சொல்ல வாய் வரவில்லை”-முதல்வர் பரபரப்பு பேச்சு

  • வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் இளம்பெண் கடத்தல்; சேலத்தில் பகீர்!

  • ‘2008 நிதி நெருக்கடியை விட உலக பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்திக்கும்’ – வெளியான ஆய்வறிக்கை

  • ”பெரியார் இல்லையென்றால் கோவணத்துடன் ஏர் ஓட்டிக்கொண்டிருந்திருப்பேன்”-துரைமுருகன் உருக்கம்

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன