Connect with us

உலகம்

விமானத்தின் வால் பகுதியில் மின்னல் தாக்கம் – பிரேசில் சம்பவம்!

Published

on

Loading

விமானத்தின் வால் பகுதியில் மின்னல் தாக்கம் – பிரேசில் சம்பவம்!

பிரேசில் நாட்டின் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தின் வால் பகுதியை மின்னல் தாக்கியுள்ளது.

பிரேசில் நாட்டின் தெற்கே சாவோ பவுலோ நகரில் குவாருலோஸ் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்படிருந்தது.

Advertisement

அப்போது, வானில் இருந்து மின்னல்தோன்றி விமானத்தின் வால் பகுதியைத் தாக்கியுள்ளது.

இதுபற்றி அந்நாட்டு தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்தியில், ஆண்டுக்கு சராசரியாக ஓரிரு முறை வர்த்தக விமானம் மீது மின்னல் தாக்குதல் ஏற்படும் என தெரிவித்தது.

மின்னல் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

எனினும், மின்னல் தாக்கிய பின்னர், அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதனால், விமானம் புறப்பட தாமதமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.  (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன