Connect with us

இந்தியா

இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குக்குள் சிறுவர்களுக்கு அனுமதியில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published

on

Loading

இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குக்குள் சிறுவர்களுக்கு அனுமதியில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா 2 திரைப்படத்தைப் பார்க்க வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு அவரது 8 வயது மகனும் படுகாயமடைந்தார். இவ் விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு திரைப்பட டிக்கெட் விலை, சிறப்பு காட்சி அனுமதி போன்றவை தொடர்பாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீதிபதி விஜய்சென் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.

Advertisement

அதில், “16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்போ அல்லது இரவு 11 மணிக்கு பின்போ அதிகாலை மற்றும் இரவு காட்சிகளில் திரையரங்குக்குள் அனுமதிக்கக்கூடாது” என திரையரங்குகள் உரிமையாளர்களுக்கும் தெலுங்கானா மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகள் திரையரங்குக்குள் வருவது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் குழந்தைகள் உளவியலாளர்களுடனும் கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“இந்த உத்தரவு இப்போதே நடைமுறைக்கு வந்துள்ளது. பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி குழந்தைகளின் பாதுகாப்பையும் உறதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் விரைவில் உருவாக்கும்” என நீதிபதி தெரிவித்ததோடு, இந்த வழக்கை அடுத்த மாதம் 22 ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன