உலகம்
தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்!

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்!
தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிம்ஹே விமான நிலையத்தின் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்ததுள்ளது.
எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானம் 169 தென் கொரியா பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் 176 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.