Connect with us

உலகம்

தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் சாவு!

Published

on

Loading

தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் சாவு!

தெற்கு சூடானில் நேற்று(29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானின் வடபகுதியில் உள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர்.

Advertisement

இந்த விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில ஆண்டுகளில் சூடானில் பல்வேறு விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன