Connect with us

உலகம்

டிக்டொக் வீடியோ போட்ட மகள்…சுட்டுக்கொன்ற தந்தை!

Published

on

Loading

டிக்டொக் வீடியோ போட்ட மகள்…சுட்டுக்கொன்ற தந்தை!

அமெரிக்க வாழ் பாகிஸ்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி டிக் டொக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது சிறுமியின் தந்தைக்கு பிடிக்காததால் டிக் டொக் வீடியோ போடுவதை நிறுத்தும்படி பல முறை எச்சரித்துள்ளார்.

ஆனால், சிறுமி அதனை காதில் வாங்காமல் தொடர்ந்தும் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி பாகிஸ்தானின் குவெட்டாவிலுள்ள சொந்த ஊருக்கு சிறுமியின் குடும்பம் சென்றுள்ளது.

Advertisement

அப்போது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உடலில் திடீரென துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். எங்கிருந்தோ வந்த குண்டு மகளை காயப்படுத்தி அவள் இறந்ததாக சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையில் சிறுமியின் தந்தையும் அவரது மைத்துனரும் சேர்ந்து சிறுமியை கொலை செய்தமை தெரிய வந்துள்ளது.

இதனால் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். டிக்டொக் வீடியோ போட்டதால் தந்தையே மகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன