உலகம்
தொடரும் கைதிகளின் விடுதலை!

தொடரும் கைதிகளின் விடுதலை!
ஹமாஸ் அமைப்பினால் மேலும் சில பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இன்றைய தினம் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதில் இஸ்ரேல் நாட்டவர்கள் மூவரும் தாய்லாந்து நாட்டவர்கள் ஐவரும் உள்ளடங்குகின்றனர். குறித்த தாய்லாந்து நாட்டவர்கள் இஸ்ரேலில் விவசாய தொழிலில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் பணயக்கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேலினால் கைதுசெய்யப்பட்ட 110 பலஸ்தினர்கள் இதற்கு முன்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.