Connect with us

இந்தியா

டில்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல்!

Published

on

Loading

டில்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல்!

இந்திய தலைநகர் டில்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

டில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பெப்ரவரி 23 ஆம் திகதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 

Advertisement

புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டில்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. டில்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டில்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை சுமூகமாக நடத்த 220 கம்பெனி துணை இராணுவப் படை வீரர்களும், 19,000 ஊர்காவல் படையினரும், டில்லி பொலிஸார் 35,626 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன