Connect with us

இந்தியா

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய மோடி

Published

on

Modi at kumbh 1

Loading

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய மோடி

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். மேலும், அவர் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.  இந்த ஆண்டுக்கான மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நாள்தோறும் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் இதில் புனித நீராடினர்.  இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் இன்றைய தினம் கும்பமேளா நிகழ்வுகளில் பங்கேற்றார். முன்னதாக உத்தர பிரதேசத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு அளித்தார். இதையடுத்து, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.   புனித நீராடிய பின்னர், பல்வேறு பூஜைகள் செய்து மோடி வழிபாடு நடத்தினார். அவருக்கு பால், சால்வை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.ஏற்கனவே, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதியன்று கும்பமேளா ஏற்பாடுகளை மோடி பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன