Connect with us

உலகம்

உம்ரா பயணம் காரணமாக சவுதி அரேபியாவிற்கான விமான கட்டணம் உயர்வு

Published

on

Loading

உம்ரா பயணம் காரணமாக சவுதி அரேபியாவிற்கான விமான கட்டணம் உயர்வு

ரமலான் மாதம் அடுத்த மாதம் (மார்ச்) தொடங்க இருப்பதையொட்டி அமீரகத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Advertisement

இது இஸ்லாத்தின் 5 அடிப்படை கடமைகளில் நோன்பு கடைபிடிப்பது 3வது கடமை ஆகும். திருக்குர்ஆன் இறங்கிய புனித மாதம் என்பதால் ரமலான் மாதம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. 

அமீரகத்தில் ரமலான் மாதம் அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘உம்ரா’ என்றால் ‘தரிசனம் செய்வது’என்று பொருள். புனித ஹபாவை தரிசனம் செய்வதற்கு உம்ரா என்று கூறப்படும். 

Advertisement

இந்த பயணம் ரமலான் மாதத்தையொட்டி சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு செல்ல பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக அமீரகத்தில் இருந்து உம்ரா பயணம் செல்ல பலர் திட்டமிட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக சவுதி அரேபியாவுக்கு செல்லும் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அமீரகத்தில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெத்தா நகருக்கு செல்ல கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரூ.13, 842 கட்டணமாக இருந்தது. 

Advertisement

தற்போது துபாயில் இருந்து ஜெத்தாவுக்கு ஒரு வழி பயண கட்டணம் ரூ.23,389 ஆக இருக்கிறது. சராசரியாக இருவழி பயண கட்டணம் ரூ.33,412 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த விமான கட்டணமானது 140 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, உம்ரா பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் தங்களது பயண திட்டத்தை முன்பே வகுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன