Connect with us

இந்தியா

மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் இரட்டைக் கருக்கள்!

Published

on

Loading

மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் இரட்டைக் கருக்கள்!

இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பெண்ணுக்கு ‘கருவில் கரு’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு புல்தானா மகளிர் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 

Advertisement

அங்கு மருத்துவக்குழு புதிதாகப் பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து இரண்டு கருக்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியது.அமராவதி பிரதேச மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஒருவரின் மேற்பார்வையில் பிறந்த 3 நாட்கள் ஆன அந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர் மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் கைகள் மற்றும் கால்களுடன் இரண்டு கரு  இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சையின் போது கருக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. மேலும் குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாகவும்

Advertisement

அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி செய்த புல்தானா மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர், பேசுகையில், ‘கருவில் கரு’ என்பது மிகவும் அரிதான மருத்துவ நிலைகளில் ஒன்று இது ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறதுஎன்று தெரிவித்தார்.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன