Connect with us

விளையாட்டு

சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்று அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!

Published

on

Students

Loading

சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்று அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்ற கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.டெல்லியில், வாக்கோ இந்தியா 4-வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில், இந்தியா, துருக்கி, ரஷ்யா, பிரிட்டன், மலேசியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா தரப்பில் கோவையில் இருந்து துடியலூர் ஆண்ட்லி ப்ளோக் பெல்ட் அகாடமியில்  பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களான கிஷோர், சஞ்சய் மற்றும் டிவின், மன்சர், சபரி பாலா ஆகிய ஐந்து பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட ஐந்து மாணவர்களும் 8 தங்கப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி, போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய மாணவர்களுக்கு அகாடமி சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.செய்தி – பி.ரஹ்மான்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன