Connect with us

இலங்கை

விடுதலை புலிகளின் தலைவர் பெயரை தனக்கு கவசமாக்கும் அர்ச்சுனா எம்.பி

Published

on

Loading

விடுதலை புலிகளின் தலைவர் பெயரை தனக்கு கவசமாக்கும் அர்ச்சுனா எம்.பி

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன், தேசியத் தலைவர் பிறந்த வல்வெட்டித்துறையை பார்த்து வளர்ந்தவன். தேசிய தலைவர் வழியில் நின்ற என்னை மிரட்ட முடியும் என நினைப்பது நகைப்புக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(6) உரையாற்றிய ர் அர்ச்சுனா எம்பி,
நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். தேசிய தலைவர் பிறந்த வல்வெட்டித்துறையை பார்த்து வளர்ந்தவன்.

Advertisement

நாங்கள் சர்க்கஸ் கூடாரம் வைத்தாலும், அங்கு கழுதைகள், குதிரைகள் வந்து நின்றாலும் அவற்றுடன் சேர்ந்து படமெடுக்க தயாராகத்தான் இருக்கினறோம்.

ஆனால் அவ்வாறான கழுதைகளை எங்களுடைய தலைவர்களாக ஏற்க யாழ். மண்ணில் பிறந்த எந்தத் தமிழனும் தயாரில்லை என்றார்.

யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகரன் சண்டித்தனம்மூலம் ஏதாவது செய்யலாம் என நினைக்கலாம்.

Advertisement

44 ஆயிரம் போராளிகளை உயிர்கொடுத்த என்னுடைய தேசிய தலைவர் வழியில் நின்ற என்னை, உங்களால் மிரட்ட முடியாது.

அவ்வாறு செய்யலாம் என நினைப்பது நகைப்புக்குரிய விடயம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன