Connect with us

உலகம்

சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நிலச்சரிவு – 30 பேர் மாயம்!

Published

on

Loading

சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நிலச்சரிவு – 30 பேர் மாயம்!

சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
10 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது . இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். 
 
அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
“காணாமல் போனவர்களைத் தேடி மீட்கவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும், அதன் பின்விளைவுகளை முறையாகக் கையாளவும் முடிந்த அனைத்தையும் செய்ய” சீன ஜனாதிபதி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன