Connect with us

இலங்கை

கொழும்பு துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

Published

on

Loading

கொழும்பு துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று (10.02.2025) மாலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள இரண்டு குற்றக் கும்பல்களுக்கிடையில் நிலவி வந்த தகராறின் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் T – 56 ரக துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 43 வயதுடைய நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த நபர் குடு கண்ணா என அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் சீடர் ஆவார்.

Advertisement

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன