Connect with us

இலங்கை

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் விஜயம்!

Published

on

Loading

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் விஜயம்!

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் இன்றையதினம் கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத்துக்கு இன்று (11.02.2025) திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார். 

மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

Advertisement

மேற்படி திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.

அத்துடன்,  இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட படகுகளின் நிலை பற்றியும் அமைச்சர் இதன்போது அவதானம் செலுத்தினார்.

அரசாங்கம் மூலம் மீனவர்களுக்கென வழங்கப்படும் நிவாரணங்களை எவ்வித தடையுமின்றி உரியவகையில் பெற்றுக்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளதா என்பது பற்றியும் அமைச்சர், அதிகாரிகளிடம் வினவினார். (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன