இலங்கை
நாளையதினம் மின்வெட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாளையதினம் மின்வெட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பெப்ரவரி 14 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, நாளையதினம் மின்வெட்டு நடைமுறையில் இருக்காது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏனைய நாட்களைப் போல அதிக தேவை இல்லாததால், போயா தினத்தை முன்னிட்டு மின்வெட்டு தேவையில்லை என்று மின்சார சபை கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.