இந்தியா
31 மாவோயிஸ்ட் ஆயுததாரிகள் சாவு!

31 மாவோயிஸ்ட் ஆயுததாரிகள் சாவு!
இந்தியாவின் ச்சட்டிஸ்கார் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பரஸ்பர தாக்குதலில் இந்திய பாதுகாப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மத்திய பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் 31 பேர் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் பலியாகியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ச்சட்டிஸ்காரின் இந்திராவாதி பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதிகளவிலான மாவோயிஸ்ட்டுகள் குறித்த பகுதியில் ஒன்றுகூடியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் படை நடவடிக்கையையடுத்து குறித்த பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட் போது ஆயுதங்களும் கிரெனட் இயக்கிகளும் கண்டுபிடிக்கப்படடதாக இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் நக்சலைட்டுகள் எனவும் அறியப்படுகின்றனர்.