பொழுதுபோக்கு
கண்ணடித்து பிரபலம்; முதல் படம் படுதோல்வி… இப்ப பாலிவுட்டில் ரொம்ப பிஸி; இந்த நடிகை யாருன்னு தெரியுதா?

கண்ணடித்து பிரபலம்; முதல் படம் படுதோல்வி… இப்ப பாலிவுட்டில் ரொம்ப பிஸி; இந்த நடிகை யாருன்னு தெரியுதா?
பிரியா பிரகாஷ் வர்ரியர் கண் அடித்தது வைரலாகி, உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரை பற்றி இன்டர்நெட்டில் தேடத் தொடங்கிய பின்னர் நகரத்தின் பேச்சாக மாறியது.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஆகியோர் அதுவரை கூகிளில் அதிகம் தேடப்பட்ட நபராக இருந்தனர், ஆனால் பிரியா பிரகாஷ் வர்ரியர் அவர்களைத் தாண்டி மிகவும் தேடப்பட்ட நபராக மாறினார்.தற்போது ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தென்னிந்தியப் படங்களில் நடித்து வரும் பிரியா, பாலிவுட்டிலும் அறிமுகமாகி, பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கக் கையெழுத்திட்டுள்ளார்.தற்போது 7 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பாலோயர்களைக் கொண்டுள்ள பிரியா, ‘4 இயர்ஸ்’, ‘இஷ்க்’, ‘ஸ்ரீதேவி பங்களா’, ‘செக்’, ‘ப்ரோ’ போன்ற படங்களில் நடித்துள்ளார். 2024-ல் வெளியாகவுள்ள ‘யாரியன் 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பிரியா, ரன்பீர் கபூர் நடிக்கும் ‘ராமாயணம்’, நடிக்கும் கன்னடப் படம் ‘விஷ்ணு பிரியா’ போன்ற படங்களிலும் நடித்து தற்போது பிசியாக உள்ளார்.மேலும் தனுஷ் இயக்கத்தில் உருவாகி தற்போது ரிலீசுக்கு காத்திருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்’ படத்திலும் நடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்