Connect with us

உலகம்

கிவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா!

Published

on

Loading

கிவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
 
குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒன்பது வயது சிறுமியும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
 
ரஷ்யாவினால் ஏழு ஏவுகணைகள் மற்றும் 71 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அவற்றுள் 6 ஏவுகணைகளுக்கு பதில் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் தீ பரவல் ஏற்பட்டதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன