இலங்கை
ரிதியாகம சபாரி பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது

ரிதியாகம சபாரி பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ரிதியாகம சபாரி பூங்காவில் புதிதாக பிறந்த சிங்கக்குட்டிகளுக்கு நேற்று (12) உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
லாரா மற்றும் டோரா ஆகிய சிங்கங்களுக்கு பிறந்து மூன்று மாதங்களே ஆன குறித்த சிங்கக்குட்டிகளுக்கு பொதுமக்களால் பரிந்துரைக்கப்பட்ட சுமார் 4,000 பெயர்களில் இருந்து பெயர்கள் தெரிவு செய்யப்பட்டன.
ஆண் சிங்கக்குட்டிக்கு மேகா என்றும், ஐந்து பெண் குட்டிகளுக்கு தாரா, ஆக்ரா, பூமி , அகிரா மற்றும் எல்சா என்றும் பெயரிடப்பட்டது.
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே சிங்கக்குட்டிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.