Connect with us

இலங்கை

லசந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

Published

on

Loading

லசந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, சட்டமா அதிபர் இன்று கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்திற்கு இதனை எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

Advertisement

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு இவ்வாண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபரால் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும், மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாகவும், சாட்சிகளை செல்வாக்கு செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் என்று சட்டமா அதிபர் அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன