Connect with us

இலங்கை

வெளிநாட்டு பெண்ணின் பாராட்டத்தக்க செயல் ; ஒப்படைக்கப்பட்ட பெருமளவு போதைப்பொருள்

Published

on

Loading

வெளிநாட்டு பெண்ணின் பாராட்டத்தக்க செயல் ; ஒப்படைக்கப்பட்ட பெருமளவு போதைப்பொருள்

சீகிரியாவிற்கு வருகைதந்த தாய்லாந்து பெண் ஒருவர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருட்களை இன்று (13) மதியம் சீகிரியா பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

17 பேர் கொண்ட தாய்லாந்து சுற்றுலாப் பயணிகள் குழு 12 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (12) நாட்டிற்கு வந்திருந்தனர்.

Advertisement

விமான நிலையத்திலிருந்து பஸ்ஸில் சீகிரியாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்து அவர்களின் பொருட்களைச் சோதனையிட்ட போது, ​​தாய்லாந்து பெண்களில் ஒருவரின் பயணப் பை மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பெண் பயணப் பையை திறந்தபோது, ​​உள்ளே குஷ் போதைப்பொருள் இருப்பதை அவதானித்து அதிர்ச்சியடைந்து, சுற்றுலா நிறுவன வழிகாட்டியுடன் சீகிரியா பொலிஸாருக்கு வந்து போதைப்பொருள் பையை ஒப்படைத்தார்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்ட பயணப்பையில் 600 கிராம் நிறையுள்ள 23 பொதிகளில் குஷ் போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.

Advertisement

அதேவேளை வரலாற்றில் தம்புள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட குஷ் போதைப்பொருட்களின் மிகப்பெரிய அளவு இதுவென பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டிற்கு வந்த நிலையில், போதைப்பொருள் எவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படாமல் விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டுவர முடிந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சீகிரியா பொலிஸார் குறிப்பிட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன