உலகம்
தென்கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் கனமழை : 09 பேர் பலி!

தென்கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் கனமழை : 09 பேர் பலி!
தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதுடன் குறைந்தது 09 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தனது மாநிலத்தில் எட்டு பேர் இறந்ததாகக் கூறினார்.
வெள்ள நீரில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்கள், பலர் தங்கள் கார்களில் சிக்கிக்கொண்ட நிலையில் மீட்பு பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
ஜார்ஜியாவில், தனது படுக்கையில் படுத்திருந்த ஒரு நபர் வேரோடு சாய்ந்து விழுந்த மரம் அவரது வீட்டின் மீது மோதியதில் ஒன்பதாவது மரணம் பதிவாகியுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்