Connect with us

இந்தியா

கனடா விமான விபத்து; தரையிறங்கும்போது தலைகீழாக விழுந்ததில் 18 பேர் காயம்

Published

on

canada flight accident

Loading

கனடா விமான விபத்து; தரையிறங்கும்போது தலைகீழாக விழுந்ததில் 18 பேர் காயம்

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 80 பேருடன் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் பிப்ரவரி 17 ஆம் தேதி தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.76 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819, மினியாபோலிஸின் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒன்ராறியோவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றது. விமானத்தில் இருந்த 80 பேரும் வெளியேற்றப்பட்டனர், ஆனால் விபத்தில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் காயமடைந்தனர் மற்றும் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.Toronto Pearson is aware of an incident upon landing involving a Delta Airlines plane arriving from Minneapolis. Emergency teams are responding. All passengers and crew are accounted for.டொராண்டோ பியர்சன் விமான நிலையம் எக்ஸ் தளத்தில் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “மினியாபோலிஸில் இருந்து வந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது விபத்து நடைபெற்ற நிலையில் சம்பவம் குறித்து டொராண்டோ பியர்சன் அறிந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் அவசர குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்ஒரு குழந்தை மற்றும் 60 களில் உள்ள ஒரு நபர் உட்பட படுகாயமடைந்த மூன்று பேரை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றதாக மருத்துவ போக்குவரத்து சேவையான ஓர்ங்கே கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.60 வயது ஆடவர் டொராண்டோவில் உள்ள செயின்ட் மைக்கேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மற்றொரு நோயாளி டொராண்டோவில் உள்ள சன்னிபுரூக் சுகாதார அறிவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.விமான விபத்து டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) ஒரு அறிக்கையை வெளியிட்டது, மேலும் விமானத்தில் இருந்த 80 பேரும் வெளியேற்றப்பட்டதாகவும், கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணைக்கு பொறுப்பாகும் என்றும் உறுதிப்படுத்தியது.”எண்டெவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819, கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி 14:45 மணியளவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது” என்று எஃப்.ஏ.ஏ தெரிவித்துள்ளது.மினியாபோலிஸில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 சம்பந்தப்பட்ட “மோசமான சம்பவத்தை” டொராண்டோ விமான நிலையத்தில் உன்னிப்பாக கவனித்து வருவதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் எக்ஸ் தளத்தில் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.I’m closely following the serious incident at the Pearson Airport involving Delta Airlines flight 4819 from Minneapolis. All 80 passengers onboard are accounted for. Updates will follow.அனிதா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விமானத்தில் இருந்த 80 பயணிகளும் கணக்கிடப்பட்டுள்ளனர். அப்டேட்ஸ் வரும்” என்றார். விபத்து மற்றும் விமானம் தலைகீழாக கவிழ்ந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன