உலகம்
தாக்குதல் ட்ரோன்களை அறிமுகப்படுத்திய ஈரான்!

தாக்குதல் ட்ரோன்களை அறிமுகப்படுத்திய ஈரான்!
ஈரான் இஸ்லாமிய குடியரசின் புரட்சிக் காவல் படை புதிய ட்ரோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஈரானின் தென் மேற்கு பகுதியில் இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் தரைப்படையினது யுத்த பயிற்சியின் போதே இந்த ட்ரோன்கள் அறிமுகப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த யுத்த பயிற்சியில் தாக்குதல், தற்கொலை மற்றும் உளவு பார்க்கும் பணிகளில் ஈடுபடக்கூடிய ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பத்தப்பட்டுள்ளன.
பினா, கன்தில் 4, 5 என்ற பெயர்களில் உளவு ட்ரோன்களும், ராஅத் 2, 3 மற்றும் சயீக் என்ற பெயர்களில் தற்கொலை ட்ரோன்களும், சாபர், ரெசாவான் என்ற பெயர்களில் தாக்குதல் ட்ரோன்களும் அர்பீன் என்ற பெயர் கொண்ட குண்டு வீச்சு ட்ரோனும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.